Wednesday 9 November 2011

nanakiyal aval

         நானாகிய அவள்
 செல்லரித்த குடையானது
என்மனம்
அவளது நினைவுகளால்
 நீங்க புன்னகையால் 
நெகிழ்கிறது 
கல்லான மனது 
காவியம் படைக்கும் 
காதலானது 
எங்களுடையது
 

natpu

                  நண்பர்கள் 
காலங்கள் கடந்து செல்லும் 
காயங்கள் மட்டும் நிலைக்கும் 
இனிமையான நினைவுகளால் என்றும் 
இனிக்கும் அந்த காயங்கள் 
பார்க்காத நாட்களில் எப்போது 
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்  
மறக்காத நினைவுகளோடு இன்று 
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
அன்பான உன் வார்த்தைகள் 
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம் 
                        

Sunday 6 November 2011

ullatthin parvai

உள்ளத்தின் பார்வை 
எங்கேயோ தேடுகிறாய் 
என்னுள்ளே உன்னைக் 
காண  மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது 
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின் 
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை 
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள் 
உண்மை உரைக்கின்றன  
உன்னுள் நானிருப்பதை 
உண்மையை மட்டும் 
உரைக்க மறைப்பதேன்
                              -மருத.கண்ணன்